திங்கள், 10 நவம்பர், 2008

தமிழர் யாருமே...


இப்போதும்
மரநிழலில் இருந்தபடியே
என் ஆச்சி
சருகு பொறுக்கிச் சேர்ப்பாள்.

கேட்டால்
பயிர் வளர உரம் இடுவாளாம்.
சிரிப்புவரும்.

அவள் வாழ்வது
அகதி முகாம் என்பது
எப்போதும்
அவளுக்கு நினைவில் வராது.

கைக்குத்து அரிசியோ?
கடைந்த குப்பைக்கீரைக்கறி இல்லையோ?
வீட்டு முற்றத்தில் காற்று வீசல்லையோ?
ஆச்சி அறியாமல் கேட்பாள்.

அவள் கண்ணுக்கு வெளிப்படாது.
வண்டு அரித்த ஊறல் அரிசிதான்
வயிற்றை நிரப்புதென்று.

நீட்டிக் களையாற
வேம்பு மரநிழலும்
பனை ஓலைப் பாயும் தான்
அவளுக்கு இப்பவும் வேணும்.

அவளுக்கு உரிமை இருந்தது.
தாய் நிலத்தில்
ஆசுவாசமாய் வாழ.

எங்கள் நிலை
இன்று அப்படி இல்லை என்றால்...
வருத்தப்படுவாள்.

அவளோ...
தமிழர்கள் எவருமோ...

அகதிகள் இல்லை.
என்றே
அவள் எப்போதும் நினைக்கிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்