செவ்வாய், 4 நவம்பர், 2008

சாத்தானின் இரவுகள்




இனி எப்போதும் நம் இரவுகள்
விடியப்போவதில்லை.
சூரியன்களால் மட்டும் விடிந்துவிடாது
நம் சூனிய இரவுகள்.

மரணம் ருசிக்கும் சாத்தான்கள்
மறுபடியும் முடிவெடுக்க வேண்டும்.

மனிதர் தலைகள் கொய்வதில்லை.
தசைகள் தின்பதில்லை.
என்று மற்றொருமுறை
கையெழுத்திடவும் வேண்டும்.

அதற்கு சில
ஆந்தைகளும் வௌவால்களும்
ஆதரவளிக்கவும் வேண்டும்.

அதுவரையும்
நாம் உயிர்த்துக்கொண்டு
உறங்கத்தான் வேண்டும்.

பின்னர்
பிணங்கள் இல்லாமல்
வெளவால்களாலும் வாழமுடியாது என்றாகும்.

மீண்டும்
எந்த மரணங்களும்
தடைபடப்போவதில்லை.

விடிவதற்கு அவை
விடப்போவதுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்