செவ்வாய், 4 நவம்பர், 2008

அந்நியமாகும் நிலம்


நீண்டு கொண்டிருக்கிறேன்.
எனக்கு
எல்லாப் பக்கமும் தட்டுதல்கள்.

மனம்
ஒடிந்து மெலியும் அளவிற்கு
நெளிந்து
நான் நீண்டு கொண்டிருக்கிறேன்.

அதனால்...
என் பாதைகள் நெரிசலாகி
நீளமாகி
தூரமாயும் போய்.

என் மண்ணிலிருந்து
வெகுதொலைவாகிறேன்.

என் இனம் விட்டே
வெறுக்கும் விஷம்
எனக்குள் பாய முயற்சிக்கிறது.

என்னூர் நாய்களுக்கே
என் இரத்தமோப்பம் காட்டி
அருவருப்பு ஊட்டப்பட்டிருப்பதால்...

சில பொழுதுகளில்
அவைகளில் சில
என்னை
வெறித்து வெறித்து பார்க்கும்.

அதனால்...
நீண்டுவிடவே நினைக்கிறேன்.

என் மண்ணிலிருந்தே
வெகு தொலைவாகி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்