செவ்வாய், 4 நவம்பர், 2008

மழைக்காலத்து ஈசல்

சமாதானமும்
ஓர் மழைக்காலத்து
ஈசல் தான்

சிறலர்த்தப் பறந்தபோது
சிறகுதிர்ந்து போனது.

ஒருவாறாய் உடல்வருத்தி
ஊர்ந்தபோது

இனவாதக் கழுகுகள்
உடல் கொத்திப்போனது.

இன்று
உயிர் மட்டும்
ஊனமாய்க் கிடக்கிறது.

உடல் படைக்கும் பிரமன்கள்
உயிர் பறிக்கும் யமன்களாய்

சமாதானமும்
ஓர் மழைக்காலத்து
ஈசல் தா(ன்)னா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்