திங்கள், 10 நவம்பர், 2008

இன்னொருத்தி




நிஜங்கள் எல்லாம் போலியானதால்
எனக்குள் இருக்கும்
நிஜமான நினைவுகள் மட்டும்
போதும்.

வண்ண நிறங்களில் வாழ்த்துதலும்.
வரிவரியாகக் கவிதைகளும்.
வெறும் வண்ணமும்
வல்லின இடையின மெல்லினமுமா?

நெருக்கமான வியர்வை வாடை.
விரல் பிடித்த நகக்கீறல்.
உன்விரசத்திற்கு மட்டுமா?
இன்று பார்த்தால் சிரிக்கும்
நினைவுகள் கூட
உனக்குள் அற்றவனா நீ.

உன் பக்கத்தில் பாவம்
யார் இன்னொருத்தி.

அவளும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்