
வாழ்வின் இச்சைவால்
நீண்டு செல்கிறது.
வார்த்தையும் சில நொடிநேர
மௌனமான புன்னகையும் கூட
வெளியை விரிக்கிறது
நம்மிடையே.
இருத்தலுக்கான
நிச்சயத்தை உணரும் வரை
நிலைப்பு என்பது ஊசலாடியபடியே
காலத்தைக் கெஞ்சுகிறது.
மண்ணின் மீது
ஏர்க்கால்களைப் போல
ஆழப் பதிந்த உணர்வுகளை
இன்னும் ஆழத்தில் புதைக்கிறார்கள்.
இப்போது
மரணத்தின் பின்னர்.
நீண்டு செல்கிறது.
வார்த்தையும் சில நொடிநேர
மௌனமான புன்னகையும் கூட
வெளியை விரிக்கிறது
நம்மிடையே.
இருத்தலுக்கான
நிச்சயத்தை உணரும் வரை
நிலைப்பு என்பது ஊசலாடியபடியே
காலத்தைக் கெஞ்சுகிறது.
மண்ணின் மீது
ஏர்க்கால்களைப் போல
ஆழப் பதிந்த உணர்வுகளை
இன்னும் ஆழத்தில் புதைக்கிறார்கள்.
இப்போது
மரணத்தின் பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக