செவ்வாய், 4 நவம்பர், 2008

எப்படி?


எல்லோரும் எங்களைச்
சிரிக்கச் சொல்கிறார்கள்.

எப்படி முடியும்?
நாங்கள் தான்
இன்னும் அழுதே முடிக்கவில்லையே.

மீண்டும் சூரியன்
எங்களை சுடத்தொடங்கிற்று.

தொடுவானில் சூடுபட்ட மேகமாய்
எங்கள் நிலம்
மீண்டும் சிவக்கத்தொடங்கிற்று.

இனி....
கிழக்குவிடியும் என்ற
எங்கள் கனவு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்