வெள்ளி, 14 நவம்பர், 2008

இன்னும் பிடிக்கிறது.



நாகரிகத்தின் அழுத்தங்களை
இப்போது ஆசுவாசிக்க முடியவில்லை.

திசைக்கொன்றான அதன் நாக்குகள்
மூக்கில் வாய்வைத்துறிஞ்சி
திணறடிக்கின்றன.

அவசர உலகம்
கண்ணிமைக்கும் நொடியில்
இமை பிடுங்கிப் போய்விடுகிறது.
புருவம் உயர்த்துகையில்
புதியன நுழைவாயிலில்.

பருத்திக்கு பதிலீடாக
எதை மாற்றினாலும்
கோவணத்தை மாற்றிடாத
எனது தாத்தாவை
இப்போது மிகவும் பிடிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்