திங்கள், 10 நவம்பர், 2008

நாம் சுமக்கும் ஆயுதம்


கண்ணில் பட்டுத் தெறிக்கும்
அத்தனை கிரணங்களும்
அது ஆகத்தான் தெரிகிறது.

இன்று கைகளும் தோளும் கூட
விரும்பியும் விரும்பாமலும்
அதைத்தான் சுமந்திருக்கின்றன.

ஏன் ஊரில்
இப்போது எல்லோருமே
அதைத்தான் கைகளில்
தினமும் சுமந்து திரிகின்றனர்.

என் தந்தையும் தாயும்,
அவர் முந்திய முழுவரும்
வந்து பிறந்து குலாவி
மண், கரி தின்று

நடைகற்று எழுந்து
சீர்ப்படி நெல் விதைத்து
புழுதிமணம் மாறாத
புதுநெல்லுச் சோறுண்டு

புகழாய் மகிழ்வாய்
வாழ்ந்த மண்
இந்த மண்.

அந்த மண்ணிலேயே
நல்வாழ்விற்காக
எத்தனை நாள் ஏங்குவோம்?

அதுவும் இளைஞர்கள்
எதற்காக ஏங்கவேண்டும்?

அதனால் தான்
அதை சுமப்பதற்காக
உறுதியெடுத்தோம்.

இப்போது
எங்கள் ஊரின்
எல்லோர் கைகளும் தோள்களும்
மண்வெட்டி என்(ற)று
அதைத்தான் சுமக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்