திங்கள், 10 நவம்பர், 2008

நான் யாருமல்ல.


நான் யாருமல்ல.
என்னால்
எந்தக் கடவுளையும்
படைக்கவும் முடியவில்லை.

நான் யாருடையவனும் அல்லன்.
எனக்குள் எந்த மதமும்
ஏவப்படவில்லை.

அதனால் நான்
எவனுமே அல்லன்.
எனக்குத் தெரியும்.
எப்போதும் என்னால்
மனிதனாக வாழமுடியாதென்று.

அதுபோல் எனக்கு நன்கு தெரியும்
வேறு எந்த மனிதர்களும்
இங்கு இல்லையென்றும்.

நான் யாருமல்ல.
எப்போதும் மனிதனும் அல்லன்.
ஆனால்...

மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும்
கடவுள்களைப் படைத்த சிலரை
எனக்கு பிடிக்கும்.

ஆனால் நான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்