திங்கள், 10 நவம்பர், 2008

சகோதரத்துவம்


சகோதரர்களாய்
வாழப்போவதாய் தான்
ஆங்கில சாம்ராஜ்ஜியத்திடம்
அன்று சொன்னோம்.

பின்
பங்காளிகளாகிச் சண்டையிட்டுக்
கடைசியில்
பயங்கரவாதிகளுடன் சேர்க்கப்பட்டோம்.

உரிமைகளை தாரைவார்த்து விட்டு
பின்
உருப்படாமல் போனோம்.

நீலவர்ணத்தின் கீழ்
இன்பத்திற்கு எல்லையில்லை என்றார்கள்.
தமிழர் எல்லை வரை
துயரம் தான் நீண்டது.

பின்னர்
பச்சைநிறம் வந்ததும்
வாழ்வு பசுமையாகும் என்றார்கள்.
நம்ப நட
நம்பி நடவாதே என்பார்கள்.

ஜனவரி முதல் தேதி
நாட்டின்
சகோதரர்கள் தினமாம்.
ஜனவரி முதலில்
மட்டும் தானா?

எந்தச் சகோதரர்கள்
ஆளுக்கொரு தாய்மொழியைப்
பேசுகிறார்கள்? ம்...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்