செவ்வாய், 4 நவம்பர், 2008

மௌனம் கலைத்த பெண்மை


இது கடைசி.

அழுது பார்க்கிறேன்
ஆற்றாமல்.

எரிமலைத் தீ
எந்த நீர் தணிக்கும்.

முரண்பாடுகளின் பின்னும்
மனதில் கனம்.
பிரித்தெறிய முடியாத
சிலுவை மரக்கட்டைகளாக.

எனக்கும்
எந்த நிமிடத்தையும்
வீணே புதைக்க விருப்பமில்லை.

என்றாலும்
வலித்த நொடிகளை
வலித்துப்போட்டுவிட்டு வர
அவசரத்திற்கும் முடிவதில்லை.

ஏய்..
நீயென்ன புலி வேட்டைக்காரனா?
நான் கூட
கூடுகட்ட முயலும் குயில் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்