திங்கள், 27 அக்டோபர், 2008

தேடித்தொலைந்தவன்




காதல் என்னைக்
காணாது இருந்த காலங்களில்
காதலிடம் என்னைக்
காட்டிக்கொடுத்தவள் நீ.

நான் அதை
ஏற்காத போதும்
காதலை என்னுள்
திணித்தவளும் நீ.

உனக்குள் காதல்தேடி
என்னுள்ளேயே
காணாமல் போனவன்
மட்டும் நான்.

தேடித்தருவதாய்ச்
சொல்லி
என்னைத் திருடிப்போனவள் நீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்