திங்கள், 27 அக்டோபர், 2008

உன்னால்

அன்று
சிகரங்களைத் தடவினேன்.
பாதாளங்களில்
பயமின்றிக் கால் நுழைத்தேன்.

இன்று
என் சுவடுகளில் கூட
தடுக்கிவிழுகின்றேன்.

என் அருகில்
நீ இன்றித் தனியான போது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்