திங்கள், 27 அக்டோபர், 2008

தடை

உன் இதயவறைகள்
கீறப்பட்டதாய் அறிந்து
துடித்து ஓடிவந்தேன்.

நீ அன்று
சொன்னதையே
உன் கட்டிலறைக்கதவும்
சொன்னது.

‘உட்பிரவேசிக்கத் தடை’
என்று.

வைத்தியரும் சொன்னார்...

என்னைப்போல எதுவும்
இதயத்தினுள்ளும்
இருந்ததாய் தெரியவில்லை என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்