வியாழன், 23 அக்டோபர், 2008

அர்த்தப்பட முடிந்தவை

நீ என்னிடம் உள்ள
ஒரேயொரு கவிதைப்புத்தகம்

உன் மரபுகளை வெறுத்தாலும்
உன் வரிகளாவது
எனக்குப் பிடித்துவிடாதா என்ற ஆதங்கம்.


பார்வையிலும் வார்த்தையாலும்
ஸ்பரிசித்து உதடுகள் படபடக்கும் சாக்கில்
இதழ்கள் திறக்கும் போது
படித்துப் படித்துப் பார்க்கிறேன்
அர்த்தப்பட முடிந்ததெல்லாம்
வலிக்கும் அர்த்தங்கள் சிலவற்றை மட்டுமே

முளைத்துக் கருகிய செடியாக
மனதிற்குள் உன் காதல் என்றாலும்..

ஓடும் ரயிலின் முன்னே பாயும் எத்தனிப்புடன்
உன் ஆசைகள் மனதுக்குள்
முட்டி முட்டி அடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்