வியாழன், 23 அக்டோபர், 2008

உன் மாற்றத்துக்காக

உறவுகளைச் சிறைவைக்கும்
தத்துவத்தை
உன் பக்கமான பொழுதுகளில் தான்
பழகிக்கொண்டேன்

உடைப்பெடுக்கும்
ஆசைகளினால் உன்னை கட்டிப்போட
என் வார்த்தைகளுக்குக் கூட
வசதி போதாது என்பதை
நீ அறியமாட்டாய்

அறியும் பொழுதுகளில்
என் நிஜங்கள் உனக்குத்
தீனி போடாது என்றாகி
நீ என்னை அருவருக்கவும் கூடும்

அந்த நொடிப்பொழுதிற்காய்
காத்திருக்கிறேன்
சாவினை அறிந்தும்
திகதி தெரியாத
நம் ஒவ்வொருவரையும் போல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்