வியாழன், 23 அக்டோபர், 2008

விடை சொல்ல வா

பாதைகளில்
இப்போது
உன் சுவடுகள் இல்லை
படலையிலே தபால்க்காரன்
மணி ஒலிப்பது இல்லை

கடந்து சென்ற
கடைசி நொடி
நினைவில் இல்லை
உனக்கு
என் நினைவிருக்குமோ!
தகவல் இல்லை

ஆசைகளை அன்றே சொன்னேன்
ஆரவாரம் இல்லை
அன்று முதல் உன்னை மறக்க
நேரம் இல்லை

பேசிக்கொண்ட
வார்த்தை என்று
ஒன்றும் இல்லை

இருப்பதுவும்
இனி பேசிக் கேட்கும்
தூரம் இல்லை
பேசினாலும் இனியொன்றும்
பிரயோசனம் இல்லை

பேதலிக்கும் மனம்
சொல்லியும்
கேட்குது இல்லை
ஊருக்கெல்லாம்
தெரிந்த உன் காதல்

உருப்படாதவன்
வேலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்