புதன், 22 அக்டோபர், 2008

மன்னித்துவிடு

யாரும்
தெரிந்திருக்க நியாயமில்லை.
உனக்கும் கூட
அது தேவைப்படவில்லை.

என்னைத் தவிர
எவருக்கும் நீ அழகி இல்லை.
உன்னைக் கவரும் எதுவும்
என்னிடமும் இல்லை.

பார்த்துக் கொண்டதில் சுகம்.
பக்கமாய் இருந்தும்
தொட்டுக் கொள்ளாமல்
பழகியதில் சுகம்.
கொஞ்சமாய் மொழிகள்
பகிர்ந்து கொண்டதிலும் சுகம்.

பின்...
விட்டுப் பிரிந்து தனியே

நான் மட்டும் சில துளிகள்
அழுததிலும் சுகம்.

ஒத்துக் கொள்கிறேன்.

எப்போதும்
நீ என்னை நேசித்தாய் என்றும்
இப்போதும் நீ...
என்னை காதலிக்கவில்லை என்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்