வியாழன், 23 அக்டோபர், 2008

என்னுள்ளே

என் மீது மட்டும்
ஏன் உன் விழிகள்
இத்தனை விசனப்பட்டுக் கொள்கின்றன

இன்னும்
எத்தனை காலங்கள்
பார்வையால்விரட்டி
என்னை துரத்திக்
கொண்டிருக்கப் போகின்றாய்

சூரியன் சுட்ட
படுவான் அழகை
ரசித்து கொண்டிருக்கும் நீ...

எப்போது
தூரத்தில் நின்றேனும்
என்னைத் துகிக்கப் போகிறாய்

இருவேறு துருவங்களாய் இருக்கும்
நாம் எப்போதுமே
இணைந்து கொள்ளப் போவதேயில்லையா

இதயங்கள் நன்றாய்
விலைபோகும்
இன்றைய பொழுதுகளில்
இறைச்சி விலைக்கேனும்
என் இதயத்தை
எடுத்துச் செல்ல மாட்டாயா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்