வியாழன், 23 அக்டோபர், 2008

நீ மட்டும்

ஏனோ தெரியாது
நீ என் கனவுக்குள்
எப்போதுமே நுழைவதில்லை

எல்லோரும் விசாரித்தார்கள்
நீ
எனக்குக் காதலியா என்று
சிலரிடம் மட்டும்
சொல்லி இருக்கிறேன்
நீ மட்டும்
அதற்கு முயற்சிக்கிறாய் என்று

நண்பன் ஒருவன்
சொல்லிக்கொண்டிருந்தான்
திருவிழா கூட்டத்தில்
பல சோடிக்கண்கள்
உன் மேல்
கூடுகட்டியதாமே

இருந்தும் அதற்குள்
ஒளி விட்டபடியே
உன் கண்கள்
அங்கும் என்னைத் தேடியதாமே
கேட்டபோதே
திக்..திக்.. என்கிறது

ஒரு தடவை
நீ சொன்னாயே
ஒடி ஒடிப் போனாலும்
ஒற்றைக் கால்க் கொக்காக

உன்னைக் கொத்திப் போவேன்
என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்