ஞாயிறு, 7 டிசம்பர், 2025

 சினேகப்பறவையொன்று

தன் கூட்டிற்கே திரும்பியது

இறக்கைகளை இழந்து.


இறக்கை அற்றதும் வாழ்வெனினும்

இறக்கைகள் என்பது வாழ்வாதாரம் 

சுதந்திரக் குறியீடு

விட்டாத்தி உணர்வின் அடையாளம்.

அடைப்பற்ற மகிழ்ச்சி வெளி.


கனவுகள் மெய்படும் போது

அதுவரை உடனிருந்த சில நனவுகள்

பழைய நினைவுகளாக மாறிவிடுகின்றன.


[11/11/2025, 5:10 pm]

சம்பூர் வதனரூபன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்