ஞாயிறு, 7 டிசம்பர், 2025

மனிதர்களாகவும் வாழ்கிறோம்



இருள் கவிந்த துர்சகுனங்கள் 

உணர்த்திய

இன்றைய முன்னிரவில்


அவளன்றிப் போனாலும்

நெடுநாள் கழிந்து 

முழுநிலவைக் காணமுடிகிறது.


தட்டையென ஏமாற்றும் இயல்பற்ற 

அதன் வட்ட முகத்தை

சிறு புன்னகையோடு 

இன்று எதிர்க்க முடிந்தது.


அருகே 

ஒளி மங்கிய ஒரு நட்சத்திரம் 

துடித்ததும் . 

நினைவுகளால் ஆன மேகவலை படர்ந்ததையும்

என் மனநிலையென 

ஏற்க முடியவுமில்லை.


மனிதர்கள் சுயநலம் மிக்கவர்கள்.

மனிதர்களாகவும்

மனிதர்கள் உள்ளுமே வாழ்கிறோம்.


[03/12/2025,    8:56 pm]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்