திங்கள், 15 டிசம்பர், 2008

கழுத்துப்பட்டையும் சிவப்புப்பேனாவும்



போதும்.
விட்டுவிடச் சொல்லுங்கள்.

என்னிடம் சில
சிவந்தமையுடன் கூர்முனைப் பேனாக்கள்
இருப்பது உண்மையே.

அவை
ரத்தமும் சதையும்
சிந்தப்படுதலும் சிதறுதலும் பற்றி
எழுதுவதனால்

இரத்தத்தால் நிரப்பப்பட்டவையோ என
யாரோ சில(ர)தை
தவறாக்கி சொல்லிவிட்டார்கள்.

நம்புங்கள்.

முதலில்
சட்டையின் கழுத்துப்பட்டையை
பிடித்திழுப்பவர் கைகளை
விலக்கச் சொல்லுங்கள்.

உண்மைகளை மட்டும் பறையடிக்கும்
ஊடகக்காரன் என்பதால்
எதையும் ஏன்!
நாளை இதையும் கூட..

முதலில்
என்னை விட்டுவிடச் சொல்லுங்கள்.

பிறகு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்