திங்கள், 15 டிசம்பர், 2008

பலியாடுகள்


நிகழ்காலங்கள் தீ மூட்டப்பட்டதில்
கொழுந்துவிட்டு எரியும்
நெருப்பில்

அவிந்து உடல்கருகி
துடிதுடிக்க
சிறுபான்மையினர் படையலிடப்படுகின்றனர்
களப்பலியில்.

நம்பிக்கைகள் குவிந்து கிடந்த
எதிர்காலம்
முன்னேற்பாடுகளுடன் சூறையாடப்பட்டு
அவசரமாகத் தீர்ந்து போகின்றன.

கேள்விகள் அடுக்கப்பட்ட சுவர்களும்
தேய்ந்து நொருங்கி
ஓட்டையாகிவிட்ட நிலையில்

முண்டாசுக்கவியின் வாய் முகூர்த்தம்
பலித்துவிடும் அதிக வாய்ப்போடு
அங்கலாய்க்கும் மனதுகள்.

“சிங்......... தீவினுக்கோர் பாலம்.”


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்