திங்கள், 15 டிசம்பர், 2008

மலட்டுச் சிந்தனையாளர்கள்


தட்டித்தட்டி எழுப்பி
இனி
மீண்டும் மீண்டும் பிணங்களையும்
சுட்டுச்சுட்டு போட்டாலும்
இவர்களுக்கு சாவுகள் சலிக்காது.

போதனைகளைப் போதிமரத்தடியிலேயே
போட்டுவிட்டு வந்து
போதை தெளிந்தவன் பேச்சாக
கருத்துக்களில் தடுமாற்றம்.

விட்டு விடுங்கள்.

இவர்கள் சாவுகளைத் பிய்த்து
சதை சப்பிச்சப்பி
சத்தியாக்கிரக(மு)ம் இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்