வெள்ளி, 26 நவம்பர், 2010

கண்ணனற்றுத் திரிதல்


கோபியர்களிடம் திருடிய சேலைகளைச் சேர்த்துவைத்து
கண்ணர்கள்
திரெளபதைகளைக் காத்தனர்

புதியதொரு குருசேத்திரத்தில்
பீஷ்மர்களும் துரோணர்களும் விதுரர்களுமென
சகுனிகளின் தேர்களை ஓட்டிப் போகின்றனர்.

பாரதர்கள் பகடைகளை எறிந்து
பண்டை நிலங்களை
சகுனிகளிடம் விட்டுப் போயினர்.

துச்சாதனர்கள் பார்த்திருக்க
சகுனிகளிடம் துகில்களைக் களைந்தெறிந்து
கண்ணனற்றுத் திரிகின்றனர்

திரெளபதைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்