புதன், 18 பிப்ரவரி, 2026

முன்பு நான்

 சுவரேறித் தப்பித்த பொழுதெல்லாம்                 

உன் சிறைக்கதவுகள்

என் மீள்வருகைக்காக 

நம்பிக்கையோடு திறந்து கிடந்தன.

நான் வழியறியாதவன் என்பதை 

நீ மட்டுமே அறிந்திருந்தாய்.

இப்போது 

அந்தக் கதவுகள் மூடிக்கிடக்கின்றன.

திறவுகோல்களை எப்போதோ 

நானே தொலைத்துவிட்டதாகச் சொல்கின்றாய்.

அதுவல்ல...

உண்மையில் நீ இப்போது  

காவலாளியாக இல்லை.

அன்று 

கவிதைகளின் சொற்களாய் 

நீ இருந்தாய்.

இன்று என் வலிகளின் 

காயங்களாகிப் போய்விட்டாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்